நடவடிக்கை செய்தி
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 54 நபர்கள் கடற்படை நடவடிக்கைகள் மூலம் கைது

இலங்கை கடற்படையால் 2020 நவம்பர் 12 முதல் டிசம்பர் 13 வரை தீவின் பல்வேறு கடல் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட பல நடவடிக்கைகள் மூலம் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 54 நபர்கள், அவர்களின் மீன்பிடி பொருட்களுடன் கைது செய்யப்பட்டனர்.
14 Dec 2020
கடல் வழியாக நாட்டிற்குள் கடத்த முயன்ற 3538 கிலோ கிராமுக்கும் அதிகமான உலர்ந்த மஞ்சள் கடற்படை கைப்பற்றியது

கடந்த சில வாரங்களில் நடத்திய தேடுதல் நடவடிக்கைகளின் போது, நாட்டிற்குள் கடத்த முயன்ற 3538 கிலோகிராம் உலர்ந்த மஞ்சளுடன் மூன்று (03) இந்தியர்கள் உட்பட 07 சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
14 Dec 2020
200 கிலோ கிராம் ஹெராயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் பறிமுதல் செய்ய கடற்படை உதவி

இன்று (2020 டிசம்பர் 06) மாரவில தொடுவாவ பகுதியில் நடத்தப்பட்ட ஒரு சிறப்பு நடவடிக்கையின் போது, கடத்தலில் ஈடுபட்ட சந்தேக நபர்களுடன் 100 கிலோகிராம் ஹெராயின் மற்றும் 100 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருள் (Crystal Methamphetamine) ஆகியவற்றைக் கைது செய்ய கடற்படை உதவியது.
06 Dec 2020
‘புரெவி’ சூறாவளியால் பாதிக்கப்பட்ட வடக்கு மற்றும் வட மத்திய பொது மக்களுக்கு கடற்படையின் உதவி

2020 டிசம்பர் 02 ஆம் திகதி வடகிழக்கில் நாட்டிற்குள் நுழைந்த புரெவி சூறாவளியால் பாதிக்கப்பட்ட வடக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களில் உள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்க கடற்படை உதவியது
04 Dec 2020
சட்டவிரோதமாக இந்நாட்டிற்கு கொண்டு வர முட்பட்ட 1385 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சள் மற்றும் 23 கிராமுக்கு மேற்பட்ட ஹெராயின் ஆகியவற்றுடன் 18 சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைது

கடற்படை கடந்த வாரம் வட மத்திய, வடக்கு மற்றும் கிழக்கு கடற்படை கட்டளைகளில் நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கைகளின் போது சட்டவிரோதமாக கடல் வழியாக இந்நாட்டிற்கு கொண்டு வர முட்பட்ட 1385 கிலோ கிராம் மற்றும் 500 கிராம் உலர்ந்த மஞ்சளுடன் 08 சந்தேக நபர்களும் 23 கிராம் மற்றும் 02 மிலி கிராம் ஹெராயினுடன் 10 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டன.
01 Dec 2020
கடல் வழியாக கொண்டு வர முயன்ற மேலும் 800 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சள் கடற்படை கைப்பற்றியது

கடற்படையினர் இன்று (2020 நவம்பர் 12) கல்பிட்டி தலுவ கடற்கரையில் நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்குள் கடத்த முயன்ற சுமார் 800 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சளுடன் 6 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
12 Nov 2020
கடற்படை சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது வெடிபொருட்களுடன் ஒரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்

குச்சவேலி பொடுவக்கட்டு பகுதியில் 2020 நவம்பர் 11 ஆம் திகதி கடற்படை நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, வெடிபொருட்களுடன் ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.
12 Nov 2020
ரூ.31 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள கேரள கஞ்சாவுடன் 06 சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைது

கடற்படை தீவைச் சுற்றி மேற்கொண்ட சிறப்பு நடவடிக்கைகளின் போது 106 கிலோ கிராமுக்கு மேற்பட்ட கேரளா கஞ்சாவுடன் ஆறு (06) சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
10 Nov 2020
கடலில் தீப்பிடித்த மீன்பிடிப் படகையும் படகில் இருந்த மீனவர்களையும் கடற்படையால் பாதுகாப்பாக மீட்பு

தெற்கு கடல் பகுதியில் பல நாள் மீன்பிடிப் படகொன்றில் ஏற்பட்ட தீயை வெற்றிகரமாக கட்டுப்படுத்திய கடற்படையினர் இன்று (2020 நவம்பர் 07) குறித்த மீன்பிடி படகு மற்றும் அதன் குழுவினரை பாதுகாப்பாக காலி துறைமுகத்திற்கு அழத்து வந்தனர்.
07 Nov 2020
சட்டவிரோதமாக கடல் வழியாக கொண்டு வர முயன்ற சுமார் 5711 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது

2020 நவம்பர் 06 ஆம் திகதி வடமேற்கு கடற்படை கட்டளையில் நடத்தப்பட்ட சிறப்பு நடவடிக்கைகளின் போது சட்டவிரோதமாக கடல் வழியாக கடத்த முயன்ற 5711 கிலோ கிராமுக்கு மேற்பட்ட உலர்ந்த மஞ்சளுடன் 06 சந்தேக நபர்களை இலங்கை கடற்படை கைது செய்தது.
07 Nov 2020