நடவடிக்கை செய்தி

சட்டவிரோத போதைப்பொருட்களை கொண்ட 06 சந்தேக நபர்கள் கடற்படை உதவியுடன் கைது

கடற்படை மற்றும் காவல்துறை இணைந்து கடந்த அக்டோபர் 10 ஆம் திகதி முதல் 13 ஆம் திகதி வரையிலான காலகட்டத்தில் வடக்கு, வட மத்திய மற்றும் தெற்கு கடற்படை கட்டளைகளில் மேற்கொண்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கைகளின் போது ஹெராயின் மற்றும் உள்ளூர் கஞ்சாவுடன் 6 சந்தேக நபர்களை கைது செய்தனர்.

14 Oct 2020

வடக்கு கடலில் இருந்து கேரள கஞ்சா பொதி யொன்று கடற்படை கைப்பற்றியது

இலங்கை கடற்படை மற்றும் கடலோர காவல்படை இணைந்து 2020 அக்டோபர் 11 ஆம் திகதி யாழ்ப்பாணம், மாதகல்துரை கடல் பகுதியில் மேற்கொண்ட சிறப்பு நடவடிக்கையின் போது 111 கிலோகிராமுக்கு மேற்பட்ட கஞ்சாவை கைப்பற்றியது.

12 Oct 2020

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இரண்டு துப்பாக்கிகள் மற்றும் ஒரு சந்தேகநபர் கடற்படையின் உதவியுடன் கைது

இலங்கை கடற்படை, கடலோர காவல்படை மற்றும் காவல்துறை சிறப்பு பணிக்குழு ஆகியோரால் மன்னார், நருவிலகுளம் மற்றும் கிரிந்த பகுதிகளில் 2020 அக்டோபர் 08, 09 ஆகிய திகதிகளில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின் போது உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இரண்டு துப்பாக்கிகள் மற்றும் ஒரு சந்தேக நபர் (01) கைது செய்யப்பட்டார்.

12 Oct 2020

33 கிலோ கிராமுக்கு மேற்பட்ட கேரள கஞ்சாவுடன் நான்கு சந்தேக நபர்கள் கடற்படை உதவியுடன் கைது

மன்னார், நருவிலிகுளம் பகுதியில் 2020 அக்டோபர் 09 அன்று இலங்கை கடற்படை மற்றும் காவல்துறை நடத்திய சிறப்பு நடவடிக்கையின் போது, 33 கிலோ கிராமுக்கு மேற்பட்ட கேரள கஞ்சாவுடன் இரண்டு (02) சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

10 Oct 2020

காலி, வக்வெல்ல பாலத்தில் சிக்கியுள்ள கழிவுகளை அகற்ற கடற்படை பங்களிப்பு

கிங்தோட்டை பகுதியில் கடலுக்கு செல்லும் கிங் ஆற்றில் வக்வெல்ல பகுதியில் உள்ள குறுகிய பாலத்தில் நீரினை தடுக்கும் வகையில் குவிந்து காணப்பட்ட குப்பைகளை அகற்றும் பணிகளில் கடற்படை வீரர்கள் கடந்த அக்டோபர் 05 ஆம் திகதி ஈடுபட்டுள்ளனர்.

08 Oct 2020

சட்டவிரோத போதைப்பொருட்களை கொண்ட 07 சந்தேக நபர்கள் கடற்படை உதவியுடன் கைது

2020 செப்டம்பர் 30 முதல் அக்டோபர் 06 வரையிலான காலகட்டத்தில் கடற்படை மற்றும் காவல்துறை வடமேற்கு, தெற்கு மற்றும் கிழக்கு கடற்படை கட்டளைகளில் சிறப்பு தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டதுடன், 07 சந்தேக நபர்களை சட்டவிரோத போதைப்பொருட்களுடன் கைது செய்தனர்.

07 Oct 2020

இரண்டு டன்களுக்கும் மேற்பட்ட உலர் மஞ்சளுடன் 06 சந்தேக நபர்கள் கடற்படையின் உதவியுடன் கைது

கடற்படையினர் 2020 அக்டோபர் 6 மற்றும் 7 ஆம் திகதிகளில் உடப்புவ, பூனப்பிடிய பகுதியில் மற்றும் கற்பிட்டி, சின்னப்பாடு பகுதியில் நடத்திய சிறப்பு நடவடிக்கைகளின் போது 1700 கிலோகிராமுக்கு மேற்பட்ட உலர்ந்த மஞ்சள் கொண்ட மூன்று (03) சந்தேக நபர்களும், ​​ பொலிஸாருடன் இனைந்து மன்னார் வன்காலைபாடு பகுதியில் மேற்கொண்டுள்ள மற்றொரு நடவடிக்கையின் போது 344 கிலோகிராமுக்கு மேற்பட்ட உலர்ந்த மஞ்சள் கொண்ட மூன்று சந்தேக நபர்களும் (03) ஒரு லாரி வண்டியும் கைது செய்துள்ளனர்.

07 Oct 2020

சட்டவிரோதமாக இந்நாட்டிற்கு கொண்டு வர முட்பட்ட சுமார் 902 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது

மன்னார் தால்பாடு கடற்கரையில் 2020 அக்டோபர் 02 ஆம் திகதி நடத்திய ஒரு சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக கடல் வழியாக இந்நாட்டுக்கு கொண்டுவர முட்பட்ட சுமார் 902 கிலோ கிராமுக்கு மேற்பட்ட மஞ்சளுடன் இரண்டு (02) சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

03 Oct 2020

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 43 நபர்கள் மற்றும் மீன்பிடி சாதனங்கள் கடற்படையால் கைது

கடற்படை கடந்த வாரத்தில் கிழக்கு, வடக்கு மற்றும் வட மத்திய கடற்படை கட்டளைகளில் நடத்திய சிறப்பு நடவடிக்கைகளின் போது, சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 43 நபர்களையும் அவர்களது மீன்பிடிபொருட்களும் கைது செய்தது.

30 Sep 2020

சட்டவிரோத போதைப்பொருட்களை கொண்ட 09 சந்தேக நபர்கள் கடற்படை உதவியுடன் கைது

கடந்த சில நாட்களில் தெற்கு, வட மத்திய, மேற்கு மற்றும் வடமேற்கு கடற்படை கட்டளைகளில் சிறப்பு தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள கடற்படை ஹெராயின், கேரள கஞ்சா மற்றும் தேசிய கஞ்சா கொண்ட ஒரு பெண் உட்பட 09 சந்தேக நபர்களை கைது செய்துள்ளது.

29 Sep 2020