நடவடிக்கை செய்தி
சட்டவிரோத மீன்பிடி முறைகளைத் தடுப்பதற்கான கடற்படையினரின் நடவடிக்கைகளில் 36 சந்தேக நபர்களுடன் உபகரணங்களும் கைப்பற்றப்பட்டன
இலங்கை கடற்படை, கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்துடன் இணைந்து கடந்த இரண்டு வாரங்களில் (2025 செப்டம்பர் 16 முதல் 25 வரை) உள்ளூர் நீர்நிலைகளை உள்ளடக்கி மேற்கொண்ட நடவடிக்கைகளில், தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள் மற்றும் வெடிபொருட்களைப் பயன்படுத்தி மீன்பிடித்ததற்காகவும், இரவில் சட்டவிரோதமாக மீன்பிடித்ததற்காகவும், உரிமம் இல்லாமல் மீன்பிடித்ததற்காகவும், சட்டவிரோத முறைகளைப் பயன்படுத்தி மீன்பிடித்ததற்காகவும் 36 நபர்கள், பதின்மூன்று (13) டிங்கி படகுகள் மற்றும் இரண்டு (02) படகுகளுடன் கடற்படையினர் கைப்பற்றினர்.
29 Sep 2025
உள்ளூர் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீன்பிடி படகொன்று வடகடலில் கைப்பற்றப்பட்டது
இலங்கை கடற்படை, கடலோர காவல்படையுடன் இணைந்து, யாழ்ப்பாணம் நெடுந்தீவுக்கு அருகில் உள்ள இலங்கை கடற்பரப்பில் 2025 செப்டம்பர் 28 ஆம் திகதி அதிகாலையில் ஒரு சிறப்பு தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டது, மேலும் உள்ளூர் கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடித்ததற்காக ஒரு (01) இந்திய மீன்பிடி படகு மற்றும் பன்னிரண்டு (12) இந்திய மீனவர்களை கைப்பற்றினர்.
28 Sep 2025
சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வர முயன்ற பீடி இலைகள் மற்றும் பூச்சிக்கொல்லிகளுடன் சந்தேக நபர் ஒருவர் நீர்கொழும்பில் கைது செய்யப்பட்டார்
இலங்கை கடற்படையினர் பொலிஸாருடன் இணைந்து 2025 செப்டம்பர் 24 ஆம் திகதி நீர்கொழும்பு மொரவல கடற்கரையில் நடத்திய சிறப்பு கூட்டு தேடுதல் நடவடிக்கையின் விளைவாக, நாட்டிற்கு சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட சுமார் எண்ணூற்று முப்பத்தைந்து (835) கிலோகிராம் பீடி இலைகள் மற்றும் அறுநூற்று முப்பத்தைந்து (635) கிலோகிராம் பூச்சிக்கொல்லிகளை ஏற்றிச் சென்ற மூன்று (03) டிங்கிகளுடன் சந்தேக நபரொருவர் (01) கைது செய்யப்பட்டனர்.
26 Sep 2025
சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட 1197 கிலோகிராம் பீடி இலைகள் உள்ளிட்ட பொருட்களுடன் சிலாவத்துறையில் ஒரு சந்தேக நபர் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டார்
இலங்கை கடற்படை, 2025 செப்டம்பர் 18, அன்று சிலாவத்துறை, பண்டரவேலி கடற்கரைப் பகுதியில் நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வர முயன்ற சுமார் ஆயிரத்து நூற்று தொண்ணூற்று ஏழு (1197) கிலோகிராம் பீடி இலைகள், ஆயிரத்து எழுநூற்று அறுபத்தைந்து (1765) சவர்க்கார கட்டிகள் மற்றும் ஒரு (01) டிங்கி படகு ஆகியவற்றுடன் ஒரு (01) சந்தேக நபரும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டார்.
21 Sep 2025
சட்டவிரோத மீன்பிடி முறைகளைத் தடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் 78 சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டனர்
இலங்கை கடற்படை, கடந்த இரண்டு வாரங்களில் (2025 செப்டம்பர் 01 முதல் 15 வரை) உள்ளூர் கடல் பகுதியில் மேற்கொண்ட நடவடிக்கைகளில், தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள், வெடிபொருட்கள் மற்றும் சட்டவிரோத முறைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட எழுபத்தெட்டு (78) சந்தேக நபர்களுடன், முப்பத்தைந்து (35) டிங்கி படகுகள் மற்றும் ஒரு (01) பல நாள் மீன்பிடி படகு ஆகியவை கைப்பற்றப்பட்டன.
20 Sep 2025
வடக்கு கடலில் 33 கிலோவிற்கும் அதிகமான கேரள கஞ்சாவினை கடற்படையினர் கைப்பற்றினர்
யாழ்ப்பாணத்தின் மாமுனை கடல் பகுதிகளில் 2025 செப்டம்பர் 05 ஆம் திகதி இலங்கை கடற்படை நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கைகளின் போது, முப்பத்து மூன்று (33) கிலோகிராமை விட அதிகமான (ஈரமான எடை) கேரள கஞ்சாவினை கடற்படையினர் கைப்பற்றினர்.
18 Sep 2025
இலங்கையின் தெற்கு கடற்கரையில் ஆழ்கடலில் காலில் காயம் ஏற்பட்டு ஆபத்தான நிலையில் இருந்த மீனவரை கரைக்கு கொண்டு வர கடற்படை உதவி
காலிக்கு தெற்கே 183 கடல் மைல் (சுமார் 338 கி.மீ) தொலைவில் உள்ள ஆழ்கடலில் காலில் காயம் ஏற்பட்டு ஆபத்தான நிலையில் இருந்த உள்ளூர் பல நாள் மீன்பிடி படகில் இருந்த ஒரு மீனவரை கடற்படை இன்று (2025 செப்டம்பர் 18,) அதிகாலையில் கரைக்கு கொண்டு வந்து சிகிச்சைக்காக காலியில் உள்ள கராப்பிட்டிய போதனா மருத்துவமனைக்கு கடற்டையினர் அனுப்பி வைத்தனர்.
18 Sep 2025
தலைமன்னார், மணல்திட்டைச் சுற்றியுள்ள கடல் பகுதியில் ஆட்கடத்தல்காரர்களால் கைவிடப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 06 பேரை கடற்படையினர் கைப்ற்றினர்
இலங்கை கடற்படை, 2025 செப்டம்பர் 13 ஆம் திகதி தலைமன்னார், மணல்திட்டு கடல் பகுதியில் நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக கடத்தப்பட்டு கடல் வழியாக ஆட்கடத்தல்காரர்களால் கைவிடப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஆறு (06) இலங்கையர்களை இலங்கை கடற்படையினர் கைப்ற்றினர்.
16 Sep 2025
சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 1680 கிலோ பீடி இலைகளுடன் 02 சந்தேக நபர்களை நீர்க்கொழும்பு கடல் பகுதியில் கடற்படையினர் கைப்பற்றினர்
இலங்கை கடற்படையினர், 2025 செப்டம்பர் 12 ஆம் திகதி நீர்க்கொழும்பு கடல் பகுதியில் மேற்கொண்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட சுமார் ஆயிரத்து அறுநூற்று எண்பது (1680) கிலோகிராம் (ஈரமான எடை) பீடி இலைகளை ஏற்றிச் சென்ற ஒரு டிங்கி (01) படகுடன் இரண்டு (02) சந்தேக நபர்களையும் கடற்படையினர் கைப்பற்றினர்.
16 Sep 2025
முகத்துவாரத்தில் 180 வெளிநாட்டு மதுபான போத்தல்களுடன் சந்தேக நபர் ஒருவர் சிக்கினார்
இலங்கை கடற்படை, ஸ்ரீ ஜெயவர்தனபுர பொலிஸ் சிறப்பு அதிரடிப் படையுடன் இணைந்து, 2025 செப்டம்பர் 13 ஆம் திகதி முகத்துவாரம் பகுதியில் மேற்கொண்ட கூட்டு நடவடிக்கையின் போது, சட்டவிரோத விற்பனைக்காக தயார்நிலையில் இருந்த நூற்று எண்பது (180) வெளிநாட்டு மதுபான போத்தல்களுடன் ஒரு (01) சந்தேக நபரைக் கைது செய்தனர்.
14 Sep 2025


