நடவடிக்கை செய்தி

செய்தி வெளியீடு


“பனமா கொடி கொண்ட New Diamond எண்ணெய் கப்பலில் ஏற்பட்ட தீ” என்ற தலைப்பில் 2020 செப்டம்பர் 05 அன்று 1130 மணிக்கு வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு தொடர்பானது.

பாதிக்கப்பட்ட கப்பல் இப்போது கரையிலிருந்து சுமார் 40 கடல் மைல் (சுமார் 74 கி.மீ) தொலைவில் உள்ளது மற்றும் இலங்கை கடற்படை மற்றும் பிற பங்குதாரர்கள் தொடர்ந்து தீயணைப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர், மேலும் தீயை அணைக்கும் எண்ணெய் கப்பல் மீது தீயை அணைக்கும் இரசாயனங்கள் மற்றும் தண்ணீரைப் பயன்படுத்தி குளிரூட்டும் விளைவை ஏற்படுத்துகின்றனர். இன்று பிற்பகல், இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான அமியா மற்றும் அபிக் ஆகிய இரண்டு கப்பல்களும் (02) இந்த நடவடிக்கையில் இணைந்தன.

05 Sep 2020

கடற்படை நடவடிக்கைகள் மூலம் 05 சந்தேக நபர்கள் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டனர்

கடற்படை மற்றும் காவல்துறை ஒருங்கினைந்து கடந்த தினங்களில் புத்தலம், சவீவபுர, பொடுவக்கட்டு, மன்னார் மற்றும் பல்லேமுனை பகுதிகளில் மேற்கொண்டுள்ள சிறப்பு தேடுதல் நடவடிக்கைகளின் போது ஐஸ், ஹெராயின் மற்றும் கேரள கஞ்சா ஆகியவற்றுடன் ஐந்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

05 Sep 2020

சட்டவிரோதமாக இந்நாட்டிற்கு கொண்டு வர முட்பட்ட பீடி இலைகள் கடற்படையினரால் கைது

இன்று (2020 செப்டம்பர் 05) மாரவில கடற்கரையில் நடத்தப்பட்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, கடல் வழியாக நாட்டிற்கு கடத்த முயன்ற சுமார் 506 கிலோகிராம் பீடி இலைகளுடன் 06 சந்தேக நபர்களை கடற்படை கைது செய்தது.

05 Sep 2020

செய்தி வெளியீடு


“பனமா கொடி கொண்ட New Diamond எண்ணெய் கப்பலில் ஏற்பட்ட தீ” என்ற தலைப்பில் 2020 செப்டம்பர் 05 அன்று 0600 மணிக்கு வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு தொடர்பானது.

இந்த கப்பல் நேற்று (2020 செப்டம்பர் 4,) 1800 மணிக்கு சுமார் 20 கடல் மைல் தூரத்தில் இருந்தாலும், இலங்கை கடற்படை மற்றும் பிற பங்குதாரர்களின் தொடர்ச்சியான முயற்சிகளால் கப்பலின் தீ கட்டுப்படுத்தப்பட்டதுடன் ALP Winger டக் படகு, பாதிக்கப்பட்ட கப்பலை 40 கடல் மைல் (சுமார் 74 கி.மீ) வரை ஆழ்கடலுக்கு கொண்டு சென்று நிறுத்தியது.

05 Sep 2020

செய்தி வெளியீடு


2020 செப்டம்பர் 04 அன்று 1600 மணிக்கு “பனமா கொடி கொண்ட New Diamond எண்ணெய் கப்பலில் ஏற்பட்ட தீ” தலைப்பின் கீழ் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு தொடர்பானது

எம்டி நியூ டயமண்ட் (MT New Diamond) என்ற எரிபொருள் கப்பலில் தீ கட்டுப்பாடு நடவடிக்கைகள் மிகவும் வெற்றிகரமாக நடைபெறுகின்றதுடன் குறித்த கப்பல் அதிகாலை 5.30 மணிக்கு 35 கடல் மைல் தொலைவில் உள்ளது. ஒருங்கிணைந்த செயல்பாட்டின் விளைவாக, கப்பல் எல்லா பக்கங்களிலும் பாதுகாக்கப்பட்டது, மேலும் கப்பல் நேற்று (2020 செப்டம்பர் 4,) 1800 மணிக்கு சுமார் 20 கடல் மைல் தூரத்தில் இருந்தாலும் அந்த நேரத்தில் கப்பலின் தீ நன்றாக கட்டுப்படுத்தி இருந்ததால் ALP Winger டக் படகு, கப்பலை ஆழ்கடலுக்கு கொண்டு செல்லும் பணியைத் தொடங்கியது.

05 Sep 2020

செய்தி வெளியீடு


2020 செப்டம்பர் 04 அன்று 1100 மணிக்கு “பனமா கொடி கொண்ட New Diamond எண்ணெய் கப்பலில் ஏற்பட்ட தீ” தலைப்பின் கீழ் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு தொடர்பானது

இலங்கை கடற்படை, இலங்கை விமானப்படை, இலங்கை துறைமுக ஆணையம், இந்திய கடற்படை மற்றும் இந்திய கடலோர காவல்படை ஆகியவை இணைந்து எம்டி நியூ டயமண்ட் (MT New Diamond) என்ற எண்ணெய் கப்பலில் தீ பரவுவதைக் கட்டுப்படுத்த தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இந்திய கடலோர காவல்படையின் (ICGS Sarang) ஐ.சி.ஜி.எஸ் சாரங் கப்பல் பேரழிவு நிவாரண நடவடிக்கைக்கு உதவ சம்பவ இடத்திற்கு வந்துள்ளது. தீயணைப்பு உபகரணங்கள் மற்றும் தொழில்முறை தீயணைப்பு வீரர்கள் பொருத்தப்பட்ட டி.டி.டி 01 (TTT One) டக் படகொன்றும் மற்றொரு டக் படகொன்றும் இந்திய கடலோர காவல்படை கப்பலொன்றும் இன்று மாலை பேரழிவு நிவாரண நடவடிக்கைகளுக்காக சம்பவ இடத்தை அடைய திட்டமிடப்பட்டுள்ளது.

04 Sep 2020

செய்தி வெளியீடு


2020 செப்டம்பர் 04 அன்று 0600 மணிக்கு “பனமா கொடி கொண்ட New Diamond எண்ணெய் கப்பலில் ஏற்பட்ட தீ” தலைப்பின் கீழ் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு தொடர்பானது

இலங்கை கடற்படை, இலங்கை விமானப்படை, இலங்கை துறைமுக ஆணையம், இந்திய கடற்படை மற்றும் இந்திய கடலோர காவல்படை ஆகியவை இணைந்து 2020 செப்டம்பர் 03 ஆம் திகதி காலை 8.00 மணியளவில் எம்டி நியூ டயமண்ட் (MT New Diamond) என்ற எண்ணெய் கப்பலில் தீ பரவுவதைக் கட்டுப்படுத்த தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன.

04 Sep 2020

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட நபர்கள் மற்றும் மீன்பிடி சாதனங்கள் கடற்படையால் கைது

கடற்படை கடந்த வாரத்தில் நடத்திய சிறப்பு நடவடிக்கைகளின் போது, சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இருபத்தி ஒன்பது (29) நபர்களையும் அவர்களது மீன்பிடிபொருட்களும் கைது செய்தது.

04 Sep 2020

செய்தி வெளியீடு


2020 செப்டம்பர் 03 அன்று 1800 மணிக்கு “பனமா கொடி கொண்ட New Diamond எண்ணெய் கப்பலில் ஏற்பட்ட தீ” தலைப்பின் கீழ் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு தொடர்பானது

இலங்கையின் கிழக்கு கடல் பகுதியில் சங்கமன்கந்தவிற்கு கிழக்காகவுள்ள கடற்பிராந்தியத்தில் இருந்து 38 கடல் மைல் தொலைவில் பயணித்த எம்.டி நியூ டயமண்ட் (MT New Diamond) என்ற எண்ணெய் கப்பலின் பிரதான இயந்திர அறையில் 2020 செப்டம்பர் 03 ஆம் திகதி காலை 8:00 மணியளவில் ஏற்பட்ட தீப்பரவல் அணைக்க இப்போது இலங்கை கடற்படை, இலங்கை விமானப்படை, இலங்கை துறைமுக ஆணையம், இந்திய கடற்படை மற்றும் இந்திய கடலோர காவல்படை ஆகியவை இணைந்து செயல்பட்டு வருகிறது.

04 Sep 2020

696 கிராம் ஐஸ் போதைப்பொருள் கொண்ட 04 சந்தேக நபர்கள் கடற்படை உதவியுடன் கைது

கடற்படை மற்றும் கதிர்காமம் பொலிஸ் சிறப்பு பணிக்குழு ஒருங்கினைந்து 2020 செப்டம்பர் 02 ஆம் திகதி திஸ்ஸமஹாராமய, பன்னேகமுவ மற்றும் தெபரவெவ பகுதிகளில் மேற்கொண்டுள்ள கூட்டு நடவடிக்கையின் போது ஐஸ் (Crystal Methamphetamine) போதைப்பொருள் கொண்ட நான்கு (04) சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

03 Sep 2020