Bart’s Bash Sailing Regatta – 2020 படகோட்டம் போட்டித்தொடரில் இலங்கை கடற்படை வீரர்கள் பிரகாசிப்பு

சிலோன் மோட்டார் யொட் கழகத்தினால் (Ceylon Moter Yacht Club) ஏற்பாடு செய்யப்பட்ட Bart’s Bash Sailing Regatta – 2020 படகோட்டம் போட்டித்தொடர் கடந்த செப்டம்பர் 13 ஆம் திகதி பொல்கொட நீர்த்தேக்கத்தில் வெற்றிகரமாக நடைபெற்றதுடன் அங்கு கடற்படை வீரர்கள் பல வெற்றிகள் பெற்று தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்தியுள்ளனர்.

இந்த போட்டித்தொடருக்காக கொழும்பு ராயல் கல்லூரி பாய்மரக் கழகம், கல்கிசை செயின்ட் தாமஸ் கல்லூரி பாய்மரக் கழகம், கொழும்பு ராயல் பாய்மரக் கழகம் (RCYC), Ceylon Moter Yacht Club (CMYC) மற்றும் கடற்படை பாய்மரக் கழகம் ஆகியவற்றை பிரதிநிதித்துவப்படுத்தும் 35 படகுகளுடன் 55 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.

இந்த போட்டித்தொடரில் இலங்கை கடற்படையை பிரதிநிதித்துவப்படுத்தும் போட்டியாளர்கள் லேசர் தரநிலை (Laser standard) பிரிவில் முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களையும், ஜிபி 14 (GP 14) பிரிவில் முதல் மற்றும் இரண்டாம் இடங்களையும், என்டபிரைஸ் (Enterprise) பிரிவில் முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களையும், லேசர் ரேடியல் (Laser radial) பிரிவில் மூன்றாம் மற்றும் நான்காவது இடத்தையும் வென்றார்கள்.