தேசிய துப்பாக்கி சங்கம் மற்றும் ஸ்கார்பியன் விளையாட்டுக் கழகம் இணைந்து மூன்றாவது முறையாக ஏற்பாடு செய்த Extreme shot Gun Challenge மற்றும் IPSC Shot Gun Nationals போட்டித்தொடர் - 2022 ஆகஸ்ட் 26 முதல் 28 வரை பானலுவ இராணுவ துப்பாக்கிச் சூடு தளத்தில் இடம்பெற்றதுடன் இலங்கை கடற்படையை பிரதிநிதித்துவப்படுத்தி, இப் போட்டித் தொடரில் கலந்து கொண்ட விளையாட்டு வீரர்கள் அங்கு பல வெற்றிகளை பெற்றுள்ளனர்.