விளையாட்டு செய்திகள்

கட்டளைகளுக்கிடையிலான மேசைப் பந்து போட்டி - 2025 வெற்றிகரமாக நிறைவடைந்தது

2025 ஆம் ஆண்டுக்கான கட்டளைகளுக்கிடையிலான மேசைப் பந்து போட்டி, இலங்கை கடற்படைக் கப்பல் கெமுனுவின் கமாண்டர் பராக்கிரம சமரவீர நினைவு உள்ளரங்க அரங்கில் 2025 ஆகஸ்ட் 12 முதல் 15 வரை வெற்றிகரமாக நடைபெற்றதுடன். இதில், வட மத்திய கடற்படை கட்டளை ஆண்களுக்கான ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப்பையும், மேற்கு கடற்படை கட்டளை பெண்களுக்கான ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப்பையும் வென்றது.

22 Aug 2025

கொரியா குடியரசில் நடைபெற்ற சர்வதேச டய்கோண்டோ சாம்பியன்ஷிப்பில் லெப்டினன்ட் ஆராச்சிகே நிசங்க தனது தாயகத்தை தங்கத்தால் அலங்கரித்தார்

கொரியா குடியரசின் சியோங்னம் (Seongnam) மற்றும் கயர்யோன்ங் (Gyeryong) வில் நடைபெற்ற திறந்த டய்கோண்டோ சாம்பியன்ஷிப் போட்டிகளில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய கடற்படையின் லெப்டினன்ட் ஆராச்சிகே நிசங்க, 2025 ஜூலை 20 மற்றும் ஆகஸ்ட் 10 ஆகிய திகதிகளில் தாய்நாட்டிற்காக இரண்டு (02) தங்கப் பதக்கங்களை வென்றார்.

18 Aug 2025

கடற்படை கட்டளைகளுக்கு இடையிலான ரக்பி போட்டியானது வெற்றிகரமாக நிறைவடைந்தது

கடற்படை கட்டளைகளுக்கு இடையிலான ரக்பி போட்டி - 2025, இம்முறை மேற்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் கெமுனு ரக்பி மைதானத்தில் 2025 ஜூலை 23 முதல் 25 வரை வெற்றிகரமாக நடைபெற்றதுடன், இதில் கிழக்கு கடற்படை கட்டளை ஆண்கள் சாம்பியன்ஷிப்பையும், பயிற்சி கட்டளை பெண்கள் சாம்பியன்ஷிப்பையும் வென்றது.

28 Jul 2025

‘வலவ சூப்பர் கிராஸ் - 2025’ பந்தயப் போட்டித் தொடரில் மோட்டார் சைக்கிள் பிரிவில் கடற்படை வெற்றி பெற்றது

தெற்கு மோட்டார் விளையாட்டுக் கழகம் (SOUTHERN MOTOR SPORTS CLUB) இனால் ஏற்பாடு செய்த ‘வலவ சூப்பர் கிராஸ் - 2025’ பந்தயப் போட்டி தொடர் 2025 ஜூலை 13 ஆம் திகதி உடவலவ, கிராஃப்ட்ஸ்மேன் கேட்போர் கூடத்தில் நடைபெற்றதுடன், அங்கு மோட்டார் சைக்கிள் பிரிவில் கடற்படையினரால் வெற்றியைப் பெற முடிந்தது.

21 Jul 2025

‘கட்டளைகளுக்கு இடையேயான கால்பந்து போட்டித் தொடரில் - 2025’ சாம்பியன்ஷிப்பை மேற்கு கடற்படை கட்டளை வென்றது

இலங்கை கடற்படைக் கட்டளைகளுக்கு இடையேயான கால்பந்து போட்டித் தொடர் - 2025 இல் வெலிசர கடற்படை வளாக கால்பந்து மைதானத்தில் 2025 ஜூலை 4 முதல் 11 வரை நடைபெற்றதுடன், மேற்கு கடற்படை கட்டளை ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப்பை வென்றது.

15 Jul 2025

“PCC & Handgun Nationals 2025” தேசிய துப்பாக்கி சுடுதல் போட்டித்தொடர் வெலிசரவில் வெற்றிகரமாக நிறைவடைந்தது

இலங்கையின் சர்வதேச நடைமுறை துப்பாக்கிச் சூடு கூட்டமைப்பு (International Practical Shooting Confederation - IPSC) ஏற்பாடு செய்த Pistol Caliber Carbine (PCC) மற்றும் Handgun Level III தேசிய துப்பாக்கிச் சூடு போட்டி, 2025 ஜூன் 18 முதல் 22 வரை வெலிசர கடற்படை கைத்துப்பாக்கிச் சூட்டு மைதானத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது. விருது வழங்கும் விழா 2025 ஜூன் 22 ஆம் திகதி Wave n’ Lake கடற்படை உற்சவ மண்டபத்தில் கௌரவ பாதுகாப்பு துணை அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர (ஓய்வு) அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

07 Jul 2025

‘MAHAMERUWA RALLY CROSS – 2025’ பந்தயப் போட்டியில் மோட்டார் சைக்கிள் பிரிவில் கடற்படை வெற்றி பெற்றது

இலங்கை மோட்டார் வாகனம் மற்றும் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட ‘MAHAMERUWA RALLY CROSS – 2025’ பந்தயப் போட்டி 2025 ஜூன் 29 அன்று கிரியுல்ல மகாமேருவ பாதையில் நடைபெற்றது, இதில் கடற்படை Standard 250CC மோட்டார் சைக்கிள் பிரிவில் மூன்றாம் இடத்தைப் பிடித்தது.

04 Jul 2025

கடற்படைத் தளத்தில் கட்டளைகளுக்கு இடையிலான குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் - 2025 வெற்றிகரமாக நிறைவடைந்தது

‘கட்டளைகளுக்கு இடையிலான குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்-2025’ 2025 ஜூன் 27 முதல் 30 வரை கடற்படை தளத்தின் குத்துச்சண்டை மைதானத்தில் நடைபெற்றது, இதில் வடமேற்கு கடற்படை கட்டளை ஆண்களின் சாம்பியன்ஷிப்பையும், பயிற்சி கட்டளை பெண்களின் சாம்பியன்ஷிப்பையும் வென்றது.

03 Jul 2025

கட்டளைகளுக்கு இடையேயான கயிறு இழுத்தல் போட்டித் தொடர்

இலங்கை கடற்படை கப்பல் பண்டுகாபய நிறுவனத்தில் 2025 ஜூன் 14 அன்று கட்டளைகளுக்கு இடையேயான கயிறு இழுத்தல் போட்டித் தொடர் வெற்றிகரமாக நடைபெற்றதுடன், இதில் மேற்கு கடற்படை கட்டளை ஆண்கள் சாம்பியன்ஷிப்பையும், வட மத்திய கடற்படை கட்டளை பெண்கள் சாம்பியன்ஷிப்பையும் வென்றது.

17 Jun 2025

26 வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப்பில் கடற்படை தடகள வீராங்கனை லக்ஷிமா மெண்டிஸ் உட்பட 4x400 அஞ்சலோட்ட அணி சொந்த நாட்டிற்காக வெண்கலப் பதக்கங்களை வென்றது

26வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டித் தொடர், 2025 மே 27 முதல் 31 வரை, “கொரியாவின் குமி” நகரத்தில் (Gumi, Korea) வெற்றிகரமாக நடைபெற்றன. குறித்த போட்டித் தொடரில் பெண்களுக்கான 4x400 மீட்டர் அஞ்சலோட்ட மற்றும் கலப்பு 4x400 மீட்டர் அஞ்சலோட்டத்தில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய கடற்படை தடகள வீராங்கனை மற்றும் கடற்படை பெண் மாலுமி லக்‌ஷிமா மெண்டிஸ் உள்ளிட்ட அணிகள், போட்டிகளில் மூன்றாவது இடத்தைப் பிடித்து வெண்கலப் பதக்கங்களை வென்றன.

12 Jun 2025