விளையாட்டு செய்திகள்
Sri Lanka Sports Fiesta Colombo 2024 - Mini Football Championship போட்டித்தொடரில் இரண்டாம் இடத்தை இலங்கை கடற்படை மகளிர் கால்பந்து அணி வென்றது

விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சு மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட Sri Lanka Sports Fiesta Colombo 2024 போட்டித்தொடருடன் இணைந்து நடைபெற்ற Mini Football Championship கால்பந்து போட்டித்தொடர் 2024 ஆகஸ்ட் 16 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரை கொழும்பு குதிரை பந்தய மைதானத்தில் நடைபெற்றதுடன் அதன் பெண்களுக்கான இரண்டாம் இடத்தை இலங்கை கடற்படை மகளிர் கால்பந்து அணி வென்றது.
20 Aug 2024
சீனாவில் நடைபெற்ற 04வது ஆசிய பெரா விளையாட்டுப் போட்டியில் ஆண்களுக்கான 400 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் வெண்கலப் பதக்கம் வென்ற கடற்படை வீரரான எஸ்.எம்.ஏ.எஸ்.எம்.சுபசிங்க கடற்படைத் தளபதியினால் பாராட்டப்பட்டார்

சீனா ஹெங்சூவில் (HANGZHOU) நடைபெற்ற, 04 ஆவது ஆசிய பெரா விளையாட்டுப் போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய 2023 ஒக்டோபர் 28 ஆம் திகதி நடைபெற்ற ஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் வெண்கலப் பதக்கத்தை வென்ற இலங்கை கடற்படை வீரரான எஸ்.எம்.ஏ.எஸ்.எம் சுபசிங்க, இன்று (2024 ஆகஸ்ட் 12) கடற்படை தலைமையகத்தில் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவை சந்தித்த போது, 04 ஆவது ஆசிய பரா விளையாட்டுப் போட்டியில் 400 மீற்றர் ஆண்களுக்கான போட்டியில் வெண்கலப் பதக்கத்தை வென்ற அவரது திறமையை பாராட்டி கடற்படைத் தளபதி நிதிப் பரிசையும் வழங்கிவைத்தார்.
12 Aug 2024
20-20 ஆசியக் கிண்ண மகளிர் கிரிக்கெட் போட்டித்தொடரில் இலங்கை அணியைப் பிரதிநிதித்துவப்படுத்திய கடற்படை வீராங்கனைகள் கடற்படைத் தளபதியினால் பாராட்டப்பட்டனர்

அண்மையில் முடிவடைந்த 20-20 ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டித்தொடரில் இலங்கையின் வெற்றிக்கு பங்களித்த கடற்படை கரப்பந்தாட்ட வீராங்கனைகளான கடற்படை வீராங்கனை உதேசிகா பிரபோதனி, கடற்படை வீராங்கனை ஹசினி பெரேரா மற்றும் கடற்படை வீராங்கனை ஹர்ஷிதா சமரவிக்ரம இன்று (2024 ஆகஸ்ட் 05) கடற்படை தலைமையகத்தில் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவை சந்தித்த போது, தாய்நாட்டுக்கான ஆசிய மகளிர் கரப்பந்தாட்ட சின்னத்தை வெல்வதற்கு அவர்களின் பங்களிப்பைப் பாராட்டிய கடற்படைத் தளபதி அவர்களை முறையே அடுத்த நிலைகளுக்கு உயர்த்தினார்.
05 Aug 2024
கடற்படை வீரர் ஆர்.எம்.என்.ரத்நாயக்க ‘Mr. Novice - 2024’ உடற்கட்டமைப்பு போட்டித் தொடரில் பல வெற்றிகளை பெற்றார்

இலங்கை உடற்கட்டமைப்பு சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ‘Mr Novice - 2024’ உடற்கட்டமைப்பு போட்டித் தொடர் 2024 ஜூலை 28 ஆம் திகதி தெஹிவளை எஸ் த எஸ் ஜெயசிங்க ஞாபகார்த்த அரங்கில் நடைபெற்றதுடன், இதில் கடற்படை வீரர் ஆர்.எம்.என் ரத்நாயக்க பல வெற்றிகளைப் பெற்றார்.
30 Jul 2024
‘MAHAMERUWA RALLY CROSS – 2024’ ஓட்டப் போட்டித் தொடரில், மோட்டார் சைக்கிள் பிரிவில் பல வெற்றிகளை கடற்படையினர் பெற்றுள்ளனர்

இலங்கை மோட்டார் வண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் ஓட்டுபவர்கள் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ‘MAHAMERUWA RALLY CROSS – 2024’ ஓட்டப் போட்டித் தொடர் 2024 ஜூலை 28 ஆம் திகதி கிரிஉல்ல, மஹமெருவ ஓட்டப் பாதையில் நடைபெற்றதுடன், அங்கு கடற்படை அதிதீவிர மோட்டார் சைக்கிள் அணியினர் மோட்டார் சைக்கிள் பிரிவில் பல வெற்றிகளைப் பெற்றனர்.
30 Jul 2024
கட்டளைகளுக்கு இடையேயான மேசைபந்து போட்டித் தொடர் - 2024 வெற்றிகரமாக முடிவடைந்தது

கட்டளைகளுக்கு இடையேயான மேசைபந்து போட்டித் தொடர் - 2024 ஜூலை 02 ஆம் திகதி முதல் 05 ஆம் திகதி வரை இலங்கை கடற்படை கப்பல் கெமுனு நிறுவனத்தின் பராக்கிரம சமரவீர ஞாபகார்த்த உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்றதுடன், 2024 ஜூலை 02 முதல் 05 வரை நடைபெற்ற ஆண்களுக்கான ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப்பையும், பெண்களுக்கான ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப்பையும் மேற்கு கடற்படை கட்டளையே தழுவிக்கொண்டது.
06 Jul 2024
‘கட்டளைகளுக்கு இடையேயான டெனிஸ் போட்டித்தொடர் – 2024’ யின் கோப்பையை வடக்கு கடற்படை கட்டளை வென்றது

கடற்படை மற்றும் கடல்சார் அகடமி டெனிஸ் மைதானத்தில் 2024 ஜூன் 22 முதல் 29 வரை இடம்பெற்ற ‘கட்டளைகளுக்கு இடையேயான டெனிஸ் போட்டித்தொடர் – 2024’ யின் கோப்பையை வடக்கு கடற்படை கட்டளை வென்றதுடன், இப் போட்டித் தொடரில் இரண்டாம் இடத்தை வட மத்திய கடற்படை கட்டளை வென்றது.
02 Jul 2024
எரங்க பாத்திய சைக்கிள் ஓட்டப் போட்டியில் ஆண் மற்றும் பெண் மூன்றாவது இடங்கள் கடற்படை பெற்றுள்ளது

2024 ஜூன் 01 ஆம் திகதி மிரிஸ்வத்த அன்டிய பிரதேசத்தில் நடைபெற்ற எரங்க பாத்திய சைக்கிள் போட்டியில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான மூன்றாம் இடங்களை கடற்படையினர் கைப்பற்றினர்.
05 Jun 2024
‘கடற்படை கட்டளைகளுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டித்தொடர் – 2024’ கிழக்கு கடற்படை கட்டளையில் வெற்றிகரமாக இடம்பெற்றது

‘கடற்படை கட்டளைகளுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டித்தொடர் – 2024, திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் அகடமியில் கிழக்கு கடற்படைக் கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் காஞ்சன பானகொடவின் தலைமையில் 2024 ஜூன் 01ம் மற்றும் 02ம் திகதிகளில் நடைபெற்றது, இதில் ஆண்களுக்கான வெற்றி வாகையை வெளியீட்டு கட்டளையும் பெண்களுக்கான வெற்றி வாகையை தெற்கு கடற்படை கட்டளையும் வென்றது.
04 Jun 2024
தாய்வான் திறந்த தடகள போட்டித்தொடரில் பெண்களுக்கான 1500 மீற்றர் ஓட்டப் போட்டியில் இலங்கை கடற்படை வீராங்கனை கயந்திகா அபேரத்ன வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார்

தாய்வானின், தாய்பேயில் நடைபெறுகின்ற தாய்வான் திறந்த தடகளப் போட்டித்தொடரில் 2024 ஜூன் மாதம் 01 ஆம் திகதி நடைபெற்ற 1500 மீற்றர் பெண்கள் ஓட்டப் போட்டியில் இலங்கைப் பிரதிநிதியாக கலந்து கொண்ட இலங்கை கடற்படை வீராங்கனை கயந்திகா அபேரத்ன வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.
02 Jun 2024