Sri Lanka Navy – Official Logo
EVENT NEWS 2026

ஜனாதிபதியின் ஆதரவுடன் பத்தரமுல்ல போர்வீரர்கள் நினைவிடத்தில் தேசிய போர் வீரர்கள் நினைவு நிகழ்வு

20 May 2026

2026 ஆம் ஆண்டுக்கான தேசிய போர்வீரர் நினைவு நிகழ்வு, 2026 ஆம் ஆண்டு மே மாதம் 19 ஆம் திகதி பத்தரமுல்லை போர் மாவீரர் நினைவிடத்திற்கு முன்பாக இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் ஆயுதப்படைகளின் தலைவர் திரு அனுரகுமார திசாநாயக்க அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

அதன்படி, தேசிய போர் வீரர்கள் நினைவு நிகழ்வில், நாட்டின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாக்க தங்கள் உயிர்களைத் தியாகம் செய்த முப்படைகள், காவல்துறை மற்றும் சிவில் பாதுகாப்புத் துறையின் வீரமிக்க போர் வீரர்களை நினைவுகூரும் வகையில், போர் வீரர்கள் நினைவு தூபியிற்கு முன்னால் மலர்க்கொத்து வைத்து கௌரவ ஜனாதிபதி முதலில் மலர் அஞ்சலி செலுத்தினார்.

மேலும், அக்காலத்தில் இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படைத் தளபதிகளாக மனிதாபிமான நடவடிக்கைக்குத் தலைமை தாங்கிய சிரேஷ்ட அதிகாரிகளான ப்ளீட் மார்ஷல் சரத் பொன்சேகா, கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட மற்றும் விமானப்படை மார்ஷல் ரொஷன் குணதிலகா பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர (ஓய்வு), பாதுகாப்புப் செயலர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொண்தா (ஓய்வு), முப்படைகளின் தளபதிகள் மற்றும் காவல்துறை ஜெனரல் ஆகியோர் போர்வீரர்கள் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்தனர். மேலும், சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம், போர்வீரர்கள் சேவை அதிகார சபையின் தலைவர் மற்றும் ஆயுதப் படைகள், பொலிஸ் ஆகியவற்றைச் சேர்ந்த ஓய்வுபெற்ற அதிகாரிகள் குழுவினர் போர்வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

நாட்டின் இறையாண்மை மற்றும் ஆட்புல ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதற்காக உயிரிழந்த மற்றும் காணாமல் போன மாவீரர்களின் உறவினர்கள் ரணவிரு நினைவுத் தூபிக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தியதன் பின்னர் ரணவிரு நினைவேந்தல் 2026 நிறைவு பெற்றது.

2026 ஆம் ஆண்டு தேசிய போர் வீரர்கள் தினத்தை முன்னிட்டு, மாண்புமிகு ஆளுநர்களின் ஆதரவுடன், கடற்படை, பிற ஆயுதப் படைகள் மற்றும் காவல்துறையைச் சேர்ந்த ஒரு குழுவினரின் பங்கேற்புடன், தீவு முழுவதும் உள்ள பல்வேறு இடங்களில் உள்ள போர் வீரர்களின் நினைவிடங்களுக்கு முன்பாக, போர் வீரர்களை நினைவுகூரும் விழாக்கள் பெருமையுடன் நடத்தப்பட்டன.

Accessibility Tools