Sri Lanka Navy – Official Logo
EVENT NEWS 2026

தென்கடலில் ஆபத்தில் இருந்த மீனவர் ஒருவரை சிகிச்சைக்காகக் கரைக்குக் கொண்டுவர கடற்படை உதவியது

29 May 2026

இலங்கையின் தென்கடற்கரைக்கு அப்பால் ஆழ்கடலில் விபத்துக்குள்ளான உள்ளூர் பலநாள் மீன்பிடிப் படகில் இருந்த மீனவர் ஒருவர், கொழும்பு கடல் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தின் ஒருங்கிணைப்பின் கீழ் ஒரு கடற்படைப் படகு மூலம் அவசரமாகக் கரைக்குக் கொண்டுவரப்பட்டு, சிகிச்சைக்காகக் கடற்படையால் 2026 மே 28 ஆம் திகதி அனுப்பப்பட்டார்.

2026 மே 5 ஆம் திகதி, இலங்கைக்குத் தெற்கே சுமார் எழுநூற்று முப்பது (730) கடல் மைல் தொலைவில், குடாவெல்ல மீன்பிடித் துறைமுகத்திலிருந்து ஆறு (06) மீனவர்களை ஏற்றிச் சென்ற பல நாள் மீன்பிடிக் கப்பல் ஒன்று ஆழ்கடல் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தபோது, கப்பலில் இருந்த ஒரு மீனவர் விபத்தில் சிக்கினார். கொழும்பு கடல் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்திற்கு விடுக்கப்பட்ட அறிவிப்பின் பேரில், அந்த கடற்பகுதி வழியாகச் செல்லும் வர்த்தகக் கப்பல்களுக்கு, மீனவரை சிகிச்சைக்காகக் கரைக்குக் கொண்டுவரத் தேவையான உதவிகளை வழங்குமாறு தகவல் தெரிவிக்க மையம் நடவடிக்கை எடுத்தது. அதன்படி, ‘DONG FANG WEI YE’ என்ற வர்த்தகக் கப்பலின் குழுவினர் விபத்தில் சிக்கிய மீனவரைப் பாதுகாப்பாக மீட்டனர். மேலும், 2026 மே 28, அன்று காலை, தெற்கு கடற்படைக் கட்டளையகத்தைச் சேர்ந்த ஒரு கடற்படைக் கப்பல், மீனவரை மேலதிக சிகிச்சைக்காகக் கரைக்குக் கொண்டுவர அந்த வர்த்தகக் கப்பல் இருக்கும் இடத்திற்கு அனுப்பப்பட்டது.

அதன்படி, காயமடைந்த மீனவரைக் கடற்படைக் கப்பலுக்குக் கொண்டு சென்ற பின்னர், கடற்படையினர் அவருக்கு அடிப்படை முதலுதவி அளித்து, விரைவாகக் காலி துறைமுகத்திற்கு அழைத்து வந்து, மேலதிக சிகிச்சைக்காகக் காலி தேசிய மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், கொழும்பு கடற்படைத் தளத்தில் அமைந்துள்ள கடல் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தின் ஒருங்கிணைப்பின் மூலம், இலங்கை கடல் தேடல் மற்றும் மீட்பு வலயத்திற்குள் இடர்ப்பாட்டில் உள்ள கடல்சார் மற்றும் மீனவ சமூகத்தினருக்கு நிவாரணம் வழங்குவதற்காக கடற்படை தொடர்ந்து தயார் நிலையில் உள்ளது.

Accessibility Tools