நிகழ்வு-செய்தி

சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட பீடி இலைகளுடன் புத்தளத்தில் இரண்டு சந்தேக நபர்கள் கைது

2026 மே 05 ஆம் திகதி புத்தளத்தின் பெரியபாடு பகுதியில் இலங்கை கடற்படை நடத்திய ஒரு சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்டு அங்கிருந்து கொண்டுச் செல்வதற்காக தயார் செய்யப்பட்டிருந்த சுமார் அறுநூற்று பதினெட்டு (618) கிலோகிராம் பீடி இலைகளை ஏற்றிச் சென்ற ஒரு (01) கெப் வண்டியுடன் இரண்டு (02) சந்தேக நபர்களையும் கடற்படையினர் கைப்பற்றினர்.

06 May 2026

கடற்படை நடவடிக்கைகளுக்காகத் தகவல் தொடர்புத் திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் வெற்றிகரமாக நடத்தப்பட்டது

இலங்கை கடற்படை அதிகாரிகளின் தகவல் தொடர்புத் திறன்களை மேம்படுத்தும் நோக்கத்தில், தெற்கு கட்டளைத் தளபதி, ரியர் அட்மிரல் தம்மிக விஜேவர்தன அவர்களின் தலைமையின் கீழ், கொழும்பு டோஸ்ட்மாஸ்டர்ஸ் கழகத்தால் 2026 மே 02 அன்று ஒரு சிறப்புப் பயிலரங்கம் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

06 May 2026

தீவிற்கு வந்தடைந்த ‘INS SINDHUKESARI’ நீர்மூழ்கிக் கப்பல், தனது செயல்பாட்டுத் தேவைகளை நிறைவேற்றிய பின்னர் தீவிலிருந்து புறப்படுகிறது.

இந்திய கடற்படையின் ‘INS SINDHUKESARI’ நீர்மூழ்கிக் கப்பல், செயல்பாட்டுத் தேவைகளை நிறைவேற்றுவதற்காக 2026 மே 04 ஆம் திகதி தீவிற்கு வந்தடைந்ததுடன். அக்கப்பல் இன்று (2026 மே 06 ஆம் திகதி) தீவிலிருந்து புறப்பட்டுச் சென்றது. இலங்கை கடற்படையினர், கடற்படை மரபுகளின்படி கொழும்பு துறைமுகத்தில் ‘INS SINDHUKESARI’ நீர்மூழ்கிக் கப்பலுக்கு பிரியாவிடை அளித்தனர்.

06 May 2026

இலங்கை கடற்படைக் கப்பலான எலார, தனது செயல்பாட்டு மற்றும் தகவல் தொடர்பு வசதிகளை விரிவுபடுத்தி வருகிறது

இலங்கை கடற்படைக் கப்பல் எலரவின் செயல்பாட்டு மற்றும் தகவல் தொடர்புப் பணிகளுக்கு வசதியளிக்கும் வகையில், செயல்பாட்டு அறை, பிரதான சமிக்ஞை அலுவலகம், தொலைபேசி மற்றும் தரவுப் பரிமாற்ற மையம் ஆகியவற்றை உள்ளடக்கி கட்டப்பட்ட புதிய கட்டிடம், 2026 மே 02 அன்று கடற்படைத் தளபதி, வைஸ் அட்மிரல் கான்சன பானகொட தலைமையில், வடக்கு கடற்படைக் கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் புத்திக லியனகமகேவின் பங்கேற்புடன், 2026 மே 02 அன்று திறந்து வைக்கப்பட்டது.

05 May 2026

கடற்படைத் தளபதி வடக்கு கடற்படை கட்டளைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டார்

கடற்படைத் தளபதி, வைஸ் அட்மிரல் கான்சன பானகொட, 2026 மே 01 முதல் 03 வரை வடக்கு கடற்படைக் கட்டளையகத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்தார். அங்கு அவர், கட்டளையகத்தின் செயல்பாட்டு, நிர்வாக, அபிவிருத்தி மற்றும் நலத்திட்டங்களைப் பார்வையிட்டதோடு, கடற்படையின் செயல்பாட்டு நோக்கங்கள் குறித்து கட்டளையகத்தின் அதிகாரிகள் மற்றும் கடற்படையினருக்கு விளக்கமளித்தார்.

05 May 2026

இந்திய-இலங்கை கடற்படைகளின் கூட்டு சுழியோடி பயிற்சி ‘IN-SLN DIVEX 2026’ வெற்றிகரமாக நிறைவடைந்தது

இந்திய கடற்படையின் ஒரு நீர்மூழ்கி ஆதரவுக் கப்பலான ‘INS NIREEKSHAK’ 2026 ஏப்ரல் 21 அன்று தீவிற்கு வந்தடைந்தது, மேலும் இலங்கை கடற்படை சுழியோடிகளும் கப்பலைச் சேர்ந்த மாலுமிகளும், 2026 ஏப்ரல் 21 முதல் 28 வரை கொழும்பு கடற்பகுதியில் சுழியோடி பயிற்சியை வெற்றிகரமாக நடத்தினர்.

04 May 2026

இந்திய கடற்படையின் நீர்மூழ்கிக் கப்பலான ‘INS SINDHUKESARI’ செயல்பாட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக கொழும்பு துறைமுகத்திற்கு வந்தடைந்தது

இந்திய கடற்படையின் ‘INS SINDHUKESARI’ நீர்மூழ்கிக் கப்பல், செயல்பாட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக 2026 மே 03 ஆம் திகதி கொழும்பு துறைமுகத்திற்கு வந்தடைந்தது. இதனைத் தொடர்ந்து, இலங்கை கடற்படையானது கடற்படை மரபுகளின்படி அந்த நீர்மூழ்கிக் கப்பலை வரவேற்றது.

04 May 2026

பயிற்சித் திட்டத்திற்காக தீவுக்கு வந்தடைந்த இந்திய கடற்படை கப்பலான ‘INS NIREEKSHAK’ தீவிலிருந்து புறப்படுகிறது

இந்திய கடற்படையின் ‘INS NIREEKSHAK’ என்ற கப்பல், பயிற்சித் திட்டத்திற்காக 2026 ஏப்ரல் 21 அன்று தீவிற்கு வந்தடைந்து, பயிற்சியை நிறைவுசெய்த பின்னர் 2026 ஏப்ரல் 28 அன்று தீவிலிருந்து புறப்பட்டது. இலங்கை கடற்படையினர், கடற்படை மரபுகளுக்கு இணங்க, கொழும்பு துறைமுகத்தில் ‘INS NIREEKSHAK’ கப்பலுக்கு பிரியாவிடை அளித்தனர்.

29 Apr 2026

இலங்கை கடற்படையின் 263 வது ஆட்சேர்ப்பைச் சேர்ந்த 373 பயிற்சி மாலுமிகள் கடற்படை சேவையில் இணைத்தனர்

இலங்கை கடற்படையின் 263 ஆம் ஆட்சேர்ப்பைச் சேர்ந்த நிரந்தர கடற்படையின் இருநூற்று முப்பது (230) பயிற்சி மாலுமிகள் மற்றும் தன்னார்வ கடற்படையின் நூற்று நாற்பத்து மூன்று (143) பயிற்சி மாலுமிகள் உட்பட மொத்தம் முந்நூற்று எழுபத்து மூன்று (373) பயிற்சி மாலுமிகள் அவர்களின் அடிப்படை பயிற்சியை பூர்த்தி செய்து 2026 ஏப்ரல் 27 ஆம் திகதி காலி, பூஸ்ஸ இலங்கை கடற்படை கப்பல் நிபுன நிறுவனத்தின் பிரதான பயிற்சி மைதானத்தில் இருந்து வெளியேறிச் சென்றனர். இலங்கை கடற்படைக் கப்பல் நிபுனவின் தளபதியும் கட்டளை அதிகாரியுமான கெப்டன் ரசிக பியசேனவின் அழைப்பின் பேரில், சுகாதார மற்றும் சேவைகள் பணிப்பாளர் நாயகம், ரியர் அட்மிரல் ஜனக மாரபகே, இந்தப் வெளியேறிச் செல்லும் அணிவகுப்பில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டார்.

28 Apr 2026

கடற்படைத் தளபதி, வடமேற்கு கடற்படைக் கட்டளையகத்தின் செயல்பாடுகள், நல்வாழ்வு மற்றும் விவசாயத் திட்டங்களைப் பார்வையிட்டார்

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொட, 2026 ஏப்ரல் 18 மற்றும் 19 ஆகிய திகதிகளில் வடமேற்கு கடற்படை கட்டளைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு, இக் கட்டளையின் நிர்வாக, நலன் மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளைப் பார்வையிட்டதோடு, அச்செயல்பாடுகளை மேலும் திறமையாகவும் செயல்திறனுடனும் மேற்கொள்வதற்குத் தேவையான அறிவுறுத்தல்களையும் வழங்கினார்.

23 Apr 2026