நிகழ்வு-செய்தி
கடலாமை இறைச்சியுடன் ஒருவர் கைது செய்ய கடற்படை அதரவு

மன்னார் இரானமாதா நகர் பகுதியில் 2020 ஜனவரி 31, ஆம் திகதி மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையில் கடல் ஆமை இறைச்சியுடன் ஒருவரை பொலிஸார் மற்றும் கடற்படையால் கைது செய்யப்பட்டது.
01 Feb 2020
ஜப்பான் கடற்படை பிரதிநிதிகள் குழு கடற்படை தளபதியுடன் சந்திப்பு

ஜப்பான் கடற்படைப் பிரதிநிதிகள் குழு 2020 ஜனவரி 31 ஆம் திகதி கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியல் த சில்வாவை கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்தித்தனர்.
01 Feb 2020
2019 ஆம் ஆண்டில் சிறந்த கப்பலாக இலங்கை கடற்படை கப்பல் சிந்துரல பெயரிடப்பட்டது.

2019 ஆம் ஆண்டில் சிறந்த கப்பலாக இலங்கை கடற்படை கப்பல் சிந்துரலவும், சிறந்த கிறிய கப்பலாக ஏ 521 கப்பலும் சிறந்த துரித தாக்குதல் படகாக பி 450 படகும் 2020 ஜனவரி 31 ஆம் திகதி பெயரிடப்பட்டதுடன் இது தொடர்பான ஆண்டு குறிப்பிட்டுள்ள ஒரு நட்சத்திரைக் கொண்ட சின்னங்கள் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியல் த சில்வா மூலம் வழங்கப்பட்டது.
01 Feb 2020
கடலில் பாதிக்கப்பட்ட மீனவரை கரைக்கு கொண்டு வர கடற்படை ஆதரவு

2020 ஜனவரி 31 ஆம் திகதி பல நாள் மின்பிடி படகில் காயமடைந்த ஒரு மீனவரை சிகிச்சைக்காக கரைக்கு கொண்டுவர கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளது.
01 Feb 2020
சுமார் 97 கிலோ மற்றும் 200 கிராம் கேரள கஞ்சா கடற்படையனால் மீட்பு

யாழ்ப்பாணம் மய்லடி கடல் பகுதியில் 2020 பிப்ரவரி 01 ஆம் திகதி கடற்படை மேற்கொள்ளப்பட்ட ரோந்து நடவடிக்கையின் போது சுமார் 97 கிலோ மற்றும் 200 கிராம் கேரள கஞ்சாவை கடற்படை மீட்டுள்ளது.
01 Feb 2020
சட்டவிரோத மீன்பிடி வலைகள் கொண்ட 12 நபர்கள் கடற்படையால் கைது

2020 ஜனவரி 31 ஆம் திகதி மன்னார் பகுதியில் நடத்தப்பட்ட இரண்டு சோதனைகளின் போது தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகளுடன் 12 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
01 Feb 2020
சட்டவிரோதமான முறையில் இலங்கை கடல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 08 பேர் கடற்படையினரால் கைது

சட்டவிரோதமான முறையில் இலங்கை கடல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 08 பேர் மற்றும் அவர்களின் ஒரு படகு 2020 ஜனவரி 30 ஆம் திகதி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டது.
31 Jan 2020
ராயல் ஆஸ்திரேலிய கடற்படை பிரதிநிதிகள் குழு கடற்படை தளபதியுடன் சந்திப்பு

ராயல் ஆஸ்திரேலிய கடற்படைப் பிரதிநிதிகள் குழு 2020 ஜனவரி 29 ஆம் திகதி கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியல் த சில்வாவை கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்தித்தனர்.
31 Jan 2020
பெருங்கடலில் நிறுவப்பட்ட கடல்சார் தரவுகளை சேகரிக்கும் Seaglider கருவிகள் அகற்ற கடற்படை உதவி

தேசிய நீர்வாழ் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு முகாமை அதிகாரிகள் கடற்படையுடன் இணைந்து 2020 ஜனவரி 30 ஆம் திகதி கடல்சார் தரவுகளை சேகரிக்கும் இரண்டு (02) Seaglider கருவிகளை சரிசெய்வதுக்காக அகற்ற நடவடிக்கை எடுத்துள்ளது.
31 Jan 2020
கடற்படை கப்பல்துறையில் உள்ள மின் புதிய வடிவமைப்பு பட்டறை மற்றொரு மைல்கல்லை தாண்டிவிட்டது

பி 472 துரித தாக்குதல் படகில் நிறுவப்பட்ட கொமடோர் மின் துறையின் (கிழக்கு) மின் புதிய வடிவமைப்பு பட்டறையால் உள்நாட்டில் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட கடற்படை உந்துவிசை மற்றும் திசைமாற்றி கட்டுப்பாட்டு அமைப்பு (என்.பி.எஸ்.சி) 29 ஜனவரி 2020 அன்று கிழக்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் மெரில் விக்ரமசிங்க அவர்களால் திறக்கப்பட்டது.
31 Jan 2020