இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தின் மூலோபாய இயக்கவியல் குறித்து கடற்படை அதிகாரிகளுக்கு விளக்கமளிக்கப்பட்டது
அட்மிரல் பேராசிரியர் ஜெயநாத் கொலம்பகே (ஓய்வு) அவர்களால் "சமகால உலகளாவிய நிலைமை: இந்தியப் பெருங்கடல் மற்றும் இலங்கை" என்ற தலைப்பில் சொற்பொழிவு ஒன்று 2026 ஆகஸ்ட் ஆம் திகதி கிழக்கு கடற்படை கட்டளையில் பணியாற்றும் அதிகாரிகளுக்காக நடாத்தப்பட்டது.
கிழக்கு கடற்படை தளபதி ரியர் அட்மிரல் புத்திக லியனகமகே அவர்களின் அழைப்பின் பேரில் இடம்பெற்ற இச்சொற்பொழிவு, கிழக்கு கடற்படை கட்டளையின் அதிகாரி விடுதி வளாகத்தில் நடைபெற்றது. இதில் கிழக்கு கடற்படை கட்டளைக்குட்பட்ட கப்பல்கள் மற்றும் நிறுவனங்களில் கடமையாற்றும் சிரேஷ்ட மற்றும் ஜூனியர் அதிகாரிகள், அத்துடன் கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியில் பயிற்சி பெறும் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
இங்கு, சர்வதேச சூழலை வடிவமைக்கும் முக்கிய புவிசார் அரசியல், பொருளாதார மற்றும் இராணுவ நிகழ்வுகளை அட்மிரல் கொலம்பகே விளக்கினார். மேலும், இந்த நிகழ்வுகள் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தையும் இலங்கையையும் நேரடியாகவும் மறைமுகமாகவும் எவ்வாறு பாதிக்கின்றன என்பதற்குச் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டது.
மேலும், இந்த விரிவுரையானது, கடல்சார் பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களுக்குத் தொடர்புடைய சமகால உலகளாவிய மற்றும் பிராந்திய நிகழ்வுகள் குறித்த தங்கள் அறிவையும் புரிதலையும் விரிவுபடுத்திக்கொள்ள கடற்படை அதிகாரிகளுக்கு ஒரு முக்கியமான வாய்ப்பை வழங்கியது.
மேலும், இந்த விரிவுரையின் முடிவில், கிழக்கு கடற்படைப் பகுதியின் தளபதி, கடற்படை அதிகாரிகளுடன் தனது அறிவையும் அனுபவத்தையும் பகிர்ந்துகொண்டதற்காக ஓய்வுபெற்ற அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே அவர்களுக்குத் தனது நன்றியைத் தெரிவித்ததோடு, இந்நிகழ்ச்சியைக் குறிக்கும் வகையில் ஒரு நினைவுப் பரிசையும் வழங்கினார்.