அழகிய வடக்குக் கடற்கரைப் பேணுவதற்காக இலங்கை கடற்படையின் தொடர்ச்சியான பங்களிப்பு
'கிளீன் ஸ்ரீ லங்கா' தேசிய வேலைத்திட்டத்திற்கு இணையாக, வட மாகாணத்தில் உள்நாட்டு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளைக் பெருமளவில் கவரும் கடற்கரைகளைத் தூய்மையாகவும் அழகாகவும் பேணுவதற்கு கடற்படை தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதுடன், இதன் கீழ் யாழ்ப்பாணம் கரைநகர் பகுதியில் உள்ள 'கசூரினா' கடற்கரை மற்றும் கங்கேசந்துறை கலங்கரை விளக்கத்தைச் சூழவுள்ள கடற்கரையைத் தூய்மைப்படுத்தி அழகாகப் பேணுவதற்காக, வடக்கு கடற்படை கட்டளையினால் ஏற்பாடு செய்யப்பட்ட கடற்கரை சுத்திகரிப்பு வேலைத்திட்டம் 2026 ஆகஸ்ட் மாதம் 14 மற்றும் 15 ஆகிய இரு தினங்களில் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
'கிளீன் ஸ்ரீ லங்கா' தேசியத் திட்டத்தின் கீழ் இலங்கையைச் சுற்றுச்சூழல், சமூக ரீதியாகவும் தார்மீக ரீதியாகவும் மீட்டெடுப்பதற்காக அமைக்கப்பட்ட ஜனாதிபதி செயலணியில் ஒரு முன்னணிப் பங்குதாரராக, 'தூய்மையான கடற்கரை - கவர்ச்சிகரமான சுற்றுலாத் தலம்' என்ற கருப்பொருளை நனவாக்கும் பொருட்டு, தீவைச் சுற்றியுள்ள கடற்கரையை ஒரு கவர்ச்சிகரமான கடலோரப் பகுதியாக மாற்றுவதற்கு குடிமக்களுக்கு வலுவூட்டும் வகையில் கடற்படை தொடர்ச்சியான சமூக சேவையை வழங்கி வருகிறது.
அதன்படி, வடக்கு கடற்படை கட்டளைத் தளபதியின் மேற்பார்வையின் கீழும், இலங்கை கடற்படைக் கப்பல்களான எலார மற்றும் உத்தர ஆகிய நிறுவனங்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தக் கடலோரத் தூய்மைப்பணித் திட்டங்கள் மூலம், இந்தக் கடற்கரை தூய்மைப்படுத்தும் திட்டமானது, கடற்கரைகளில் கவனக்குறைவாகக் கொட்டப்பட்டிருந்த பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் உள்ளிட்ட பெருமளவிலான திடக்கழிவுகளைச் சேகரித்து முறையாக அகற்றியதுடன், எதிர்கால சந்ததியினருக்கு ஒரு தூய்மையான கடற்கரையை விட்டுச்செல்ல உதவும் வகையில் சமூக விழிப்புணர்வுப் பலகைகளும் நிறுவப்பட்டது.