இலங்கைகளுக்கான மாலைத்தீவு குடியரசின் உயர்ஸ்தானிகர் கடற்படை தளபதியை சந்தித்தார்
இலங்கைகளுக்கான மாலைத்தீவு குடியரசின் உயர்ஸ்தானிகர் மேன்மைதங்கிய Masood Imad உத்தியோகபூர்வ சந்திப்பிற்காக இன்றைய தினம் (2026 செப்டம்பர் 08) கடற்படை தலைமையகத்தில் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோவை சந்தித்தார்.
இவ் உத்தியோகபூர்வ சந்திப்பின் போது, இலங்கை கடற்படையின் 27வது கடற்படை தளபதியாக வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ பொறுப்பேற்றமைக்காக, கடற்படை தளபதிக்கு இலங்கைகளுக்கான மாலைத்தீவு குடியரசின் உயர்ஸ்தானிகர் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டதுடன், கடல்சார் பாதுகாப்பிற்கான இரு நாடுகளின் ஒத்துழைப்பு உட்பட இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் குறித்தும் இரு தரப்பினருக்கும் இடையே சுமூகமான கலந்துரையாடல் இடம்பெற்றது.
மேலும், இந்த நிகழ்வை குறிக்கும் வகையில் இரு தரப்பினருக்கும் இடையே நினைவுப் பரிசுகளும் பரிமாறிக்கொள்ளப்பட்டதுடன், இலங்கையிலுள்ள மாலைத்தீவு குடியரசின் உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் Colonel Hassan Amir இவ் உத்தியோகபூர்வ சந்திப்பில் கலந்துகொண்டார்.